உள்ளூர் செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் - ஜெகத்ரட்சகன் எம்.பி. நாளை நாகர்கோவில் வருகை

Published On 2023-05-06 07:28 GMT   |   Update On 2023-05-06 07:28 GMT
  • காவல்கிணறு சந்திப்பில் உற்சாக வரவேற்பு
  • மாவட்ட செயலாளர் மகேஷ் அறிக்கை

நாகர்கோவில் :

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவில் வடசேரி வஞ்சியாதித்தன் புதுதெருவில் நாளை (7-ந்தேதி) மாலை 5 மணிக்கு திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதில் தி.மு.க. பொது செயலாளரும், நீர்வ ளத்துறை அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க. கொள்கை பரப்பு செய லாளர் பி.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (7-ந்தேதி) காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையம் வரும் அமைச்சர் துரைமுருகன், ஜெகத்ரட்ச கன் எம்.பி. ஆகியோர் அங்கிருந்து சாலை மார்க்க மாக குமரிக்கு வருகிறார்கள்.

அவர்களுக்கு பகல் 12 மணிக்கு காவல்கிணறு சந்திப்பில் எனது தலைமையில், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பிறகு கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்கள். பின்னர் மாலை 5 மணிக்கு வடசேரி வஞ்சியாதித்தன் புதுதெருவில் நடைபெற இருக்கும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரை யாற்றுகிறார்கள்.

எனவே நாற்கரசாலை காவல்கிணறு சந்திப்பில் வைத்து நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சி, பின்பு மாலை நடைபெறும் சாதனை விளக்க பொதுக் கூட்டம் ஆகியவற்றில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை கழக நிர்வாகிகளும் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. 

Tags:    

Similar News