உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே குளத்தில் இருந்து அம்மன் சிலை மீட்பு

Published On 2022-08-26 07:45 GMT   |   Update On 2022-08-26 07:45 GMT
  • பீங்கான் சிலை கல்குளம் தாசில்தாரிடம் ஒப்படைப்பு
  • சிலை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

கன்னியாகுமரி:

இரணியல் அருகே நெட்டாங்கோடு என்ற இடத்தில் சில வாலிபர்கள் அய்யன்குளத்தில் நீராட சென்றனர். அப்பகுதியில் நீண்ட நேரம் குளித்தனர். அப்போது திடீரென ஒருவர் காலில் ஏதோ பொருள் இடறி விட்டது அதனை மூழ்கி எடுத்தபோது அது ஒரு பெண் தெய்வம் சிலை என்று தெரிய வந்தது.

இதனையடுத்து குருந்தன்கோடு கிராம நிர்வாக அலுவலருக்கும், இரணியல் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்து பீங்கான் சிலையினை கைப்பற்றி கல்குளம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அச்சிலை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News