உள்ளூர் செய்திகள் (District)
- இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீத டிராக்டர் ஏறி விபத்து
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
கரூர்,
கிருஷ்ணராயபுரம் அருகே, மேல பஞ்சப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவர், தனது நண்பர் பண்டியனுடன், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது, குளத்துாரை சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் கீழே விழுந்த கிருஷ்ணமூர்த்தி மீது அவ்வழியாக வந்த டிராக்டர் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பாண்டியன், ஹரி ஆகியோர் காயமடைந் தனர். இவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.