உள்ளூர் செய்திகள்
கூலி வேலைக்கு சென்ற பெண் வீட்டில் தீவிபத்து
- தீயில் ஷெட்டு எரிந்து நாசமானது
- புகாரின் பேரில் தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்,
அரவக்குறிச்சி அருகே, வீட்டின் ஷெட்டுக்கு தீ வைத்த, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த, திருப்பதி என்பவரது மனைவி மகேஸ்வரி (வயது 27) இவர் கூலி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில், வீட்டுக்கு முன்னால் இருந்த ஷெட்டுக்கு, மர்ம நபர்கள் தீ வைத்து தப்பி விட்டனர். தீயில் ஷெட் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு, 7,000 ரூபாய். இதுகுறித்து, மகேஸ்வரி கொடுத்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷெட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.