உள்ளூர் செய்திகள்

ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் விடுதி

Published On 2023-05-16 06:19 GMT   |   Update On 2023-05-16 06:19 GMT
  • ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் விடுதி திறக்கப்பட்டது
  • ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது

கரூர்,

கரூர் தாந்தோணிமலை ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் விடுதி கட்டிடம் ரூ.2 கோடியே 44 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று விடுதியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்துகொண்டு விடுதியின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். இந்த விடுதியில், 7 மாணவர்கள் அறை, ஒரு காப்பாளர் அறை, ஒரு உணவருந்தும் அறை, ஒரு பொருள் வைக்கும் அறை, ஒரு எரிபொருள் அறை, ஒரு சமையலறை, 12 குளியலறை, 24 கழிவறை வசதி உள்ளது. இதேபோல் கடவூரில் ரூ.2 கோடியே 44 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல விடுதியினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தாஜூதீன், திருச்சி கோட்ட தாட்கோ உதவி செயற்பொறியாளர் அருண்குமார், தனி தாசில்தார் மைதிலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News