அ.தி.மு.க. அவைத்தலைவர் அதிரடி நீக்கம்
- கரூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்
- ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
கரூர்,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கழகத்தின் கொள்ளை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கரூர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சி.சுப்பிரமணியன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவராக கே.கனகராஜ் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கரூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.