உள்ளூர் செய்திகள்

கருப்பு எள் கிலோ ரூ.166க்கு ஏலம்

Published On 2023-03-22 08:04 GMT   |   Update On 2023-03-22 08:04 GMT
  • க.பரமத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலம்
  • விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது

கரூர்,

கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூட லூர் மேற்கு, கார்வழி, கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புன்னம், தென்னிலை, துக்காச்சி, ஆகிய பகுதிகள் மட்டுமல்லாது கரூர் ஒன்றிய பகுதியான புகழூர். வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக் காடுதுறை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் எள் சாகுபடி செய்யப்படுகிறது.மேற்கண்ட பகுதிகளில் விளையும் எள் வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன் வராததாலும் வந்த ஒரு சிலரும் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதால் விவசாயிகள் பலர் மலிவு விலைக்கு விற்க மனமில்லாமல் பலர் எள் காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணெய் எடுக்கின்றனர்.பிறகு மீதம் உள்ள எள்ளை மூட்டைகளாக கட்டி கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு 100மூட்டைகள் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டதில் கருப்பு எள் ஏலத்தில் ஒரு கிலோ குறைந்த விலையாக ரூ.146, அதிக விலையாக கிலோ ரூ.166க்கு ஏலம் போனது. இதேபோல, சிகப்பு எள் ஒரு கிலோ குறைந்த விலை யாகரூ. 151, அதிக விலையாக கிலோ ரூ. 50கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடைந்துள்ளனர்.

Tags:    

Similar News