உள்ளூர் செய்திகள்

வரதட்சணை கொடுமை கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2022-09-24 09:28 GMT   |   Update On 2022-09-24 10:27 GMT
  • வரதட்சணை கொடுமை கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
  • இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கரூர் :

கூடுதல் வரதட்சைணக் கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர், வடக்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி (வயது 27). இவருக்கும், நாமக்கல் மாவட்டம், நல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ராமராஜ் (32) என்பவருக்கும் கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

நந்தினி திருமணத்தின் போது, ராமராஜிக்கு வரதட்சனையாக ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் 18 பவுன் நகை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் ராமராஜ் தனது மனைவியிடம் கூடுதலாக வரதட்சணையாக ரூ.2 லட்சம், 10 பவுன் நகை வாங்கி வரவேண்டும் என்று அடிக்கடி தகராறு செய்து சித்திரவதை செய்ததாக தெரிகிறது. இதற்கு ராமராஜின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, நந்தினி அளித்த புகாரின்பேரில், கணவன் ராமராஜ், அவரது தந்தை சுப்பையா, தாய் சரோஜா மற்றும் உற வினர்கள் விமலா, ரேவதி ஆகியோர் மீது, கரூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News