உள்ளூர் செய்திகள் (District)

கதிர் அறுக்கும் இயந்திரம் மோதி கல்லுாரி மாணவர் பலி

Published On 2023-04-10 08:53 GMT   |   Update On 2023-04-10 08:53 GMT
  • கதிர் அறுக்கும் இயந்திரம் மோதி கல்லுாரி மாணவர் பலியானார்
  • இதுகுறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

குளித்தலை அருகே, சூரியனுார் பஞ்., மேலப்பட்டியை சேர்ந்தவர் காத்தான் மகன் ஹரிசெல்வன் (வயது 19). இவர், ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி. காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். தனது இருசக்கர வாகனத்தில் இவர் நங்கவரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, நங்கவரம் - திருச்சி நெடுஞ்சா லையில், கவுண்டம்பட்டி பகுதியில், எதிரே வந்த நெற்கதிர் அறுக்கும் இயந்திரம், பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஹரி செல்வன் உயிரிழந்தார். இது குறித்து, அவரது தந்தை காத்தான் கொடுத்த புகாரின் படி, கதிர் அறுக்கும் இயந்திர டிரைவரான, காட்டு மன்னார்கோவில், கொண்டசமுத்திரத்தை சுப்பிரமணி, மீது குளித்தலை போலீசார் சேர்ந்த வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News