உள்ளூர் செய்திகள் (District)
- தென்னிலை அருகே பரிதாபம்
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர், ஏப். 18-
தென்னிலை அருகே, கார் மோதிய விபத்தில், விவசாயி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தென்னிலை இடை யக்காரன்பாளையம் பகுதியை சேர்ந் தவர் சுப்பையன் (வயது 65) விவசாயி. இவர், தென்னிலை அருகே, அம்மாப்பட்டி பிரிவு பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, கோவையை சேர்ந்த குண ரத்ன தாமஸ் (வயது 43) என்பவர் ஓட்டி சென்ற 'ரெனால்ட்' கார், சுப்பையன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சுப்பையனின் மனைவி விஜயலட்சுமி, கொடுத்த புகாரின் படி, தென்னிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.