உள்ளூர் செய்திகள்

முட்முதரில் தீ

Published On 2023-04-15 08:39 GMT   |   Update On 2023-04-15 08:39 GMT
  • கரூர் நெடுஞ்சாலை அருகே முட்புதரில் தீ விபத்து ஏற்பட்டது
  • தீயணைப்பு வீரரகள் தீயை அணைத்தனர்

கரூர்,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டாங்கோவில் பிரிவு சாலை அருகே தனியார் ஆட்டோ கேஸ் பங்க் பின்புறம் அமைந்துள்ள 1 ஏக்கர் அளவிலான முட்புதற்காட்டில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். தீ மளமளவென எரிந்ததால் தேசிய நெடுஞ்சாலை அருகே பல அடி தூரத்திற்கு வானம் புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் ஆட்டோ கேஸ் பங்க், லாரி குடோன், ஜவுளி ஏற்றுமதி நிறுவன குடோன் ஆகியவை உள்ளது. இதனால் அபாயம் ஏற்படும் முன்பாக தடுத்து நிறுத்த வேண்டும் பொருட்டு, பொதுமக்கள் பிளாஸ்டிக் வாளிகளில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினர். தொடர்ந்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு பற்றி எரிந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News