உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-05-04 06:21 GMT   |   Update On 2023-05-04 06:21 GMT
  • மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
  • அன்றைய தினமே பணி நியமன ஆணை

கரூர்:

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உள்பட பல்வேறு துறைகள் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்புவரை, ஜ.டி.ஜ., டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, 40-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே பணிநியமன உத்தரவு வழங்கப்படவுள்ளது. மேலும் இம்முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி்கான பதிவும் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News