உள்ளூர் செய்திகள்

பண்டுதகாரன்புதூரில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

Published On 2023-05-11 07:46 GMT   |   Update On 2023-05-11 07:46 GMT
  • பண்டுதகாரன்புதூரில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது
  • வரும், 16ந்தேதி, காலை, 10 மணி முதல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது

கரூர்:

கரூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டம், பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும், 16ந்தேதி, காலை, 10 மணி முதல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆடுகளை தேர்வு செய்தல், தீவன பராமரிப்பு, ஆடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் ஆகிய தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், நேரடியாக வந்து பங்கேற்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News