உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2023-05-05 06:41 GMT   |   Update On 2023-05-05 06:43 GMT
  • போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
  • கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்:

கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வடிவேல் தலைமையிலான போலீசார் ஆத்தூர் பிரிவு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் கரூர் ராமானுஜா நகரை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 31), வடிவேல் நகரை சேர்ந்த பிரவீன் (25) ஆகிய 2 பேரும் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News