உள்ளூர் செய்திகள் (District)
- மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது
- வீடு வீடாக சென்று மருத்துவ சோதனை செய்தனர்
கரூர்:
கரூர் அருகில் நொய்யல் குறுக்குச் சாலை பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. ஓலப் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று முதியவர்கள், பாலுாட்டும் தாய் மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க் கரை அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை களை செய்தனர். பின்னர் அவர் களுக்கு தேவையான மருந்து, மாத் திரைகள் வழங்கப்பட்டன.