உள்ளூர் செய்திகள்
வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி சாவு
- வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்
- இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் குளித்தலை அருகே உள்ள மேலவதியம் பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மனைவி சின்னபிள்ளை (வயது 65). இவர் சம்பவத்தன்று அதிகாலை நடுவதியத்தில் இருந்து வதியம் பகுதிக்கு டீ குடிக்க சென்றுள்ளார். வதியம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த சின்ன பிள்ளையை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ைச ெபற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சின்னபிள்ளை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.