மூதாட்டி வழுக்கி விழுந்து உயிரிழப்பு
- பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற போது விழுந்தார்
- உடலை கைப்பற்றிய வாங்கல் போலீசார் விசாரணை
கரூர்,
கரூர் மாவட்டம் வாங்கல் போலீசாரகம் மன்மகன்களும் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ஜெரினா பேகம் (வயது 67).இவர் தனது கணவர் முபாரக் அலி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன்மங்கலம் சமத்துவபுரத்தில் தனியாக வசித்து வந்தார்இந்த நிலையில் இவர் மூர்த்தி என்பவரின் வீடு அருகில் உள்ள வாட்டர் டேங்க் பகுதியில், அமைந்துள்ள கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அங்கு தண்ணீர் பொதுக் குழாயில் இருந்து சிறிது சிறிதாக வெளியேறி கீழ்த்தளத்தில் அதிக அளவு பாசி படர்ந்து இருந்துள்ளது. இதை கவனிக்காத ஜெரினா பேகம் வேகமாக தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக அவர் வழுக்கி விழுந்து தலையில் பலவித காயம் ஏற்பட்டுள்ளது. தலையில் பலத்த காயம் அடைந்த ஜரீனா பேகத்திற்கு தலையில் இருந்து ரத்தம் அதிக அளவு வெளியேறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல்அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வாங்கள் போலீசார் ஜெரினா பேகம் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம் அணைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்