உள்ளூர் செய்திகள்

பேருந்து நிலையத்தில் கழிவுநீர் ஓடுவதால் பயணிகள் அவதி

Published On 2022-12-19 10:11 GMT   |   Update On 2022-12-19 10:11 GMT
  • பேருந்து நிலையத்தில் கழிவுநீர் ஓடுவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்
  • நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்

கரூர்:

கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தில் இருந்து, கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். தென் மாநிலங்களின், நுழைவு வாயிலாக உள்ள கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கரூர் நகராட்சி நிர்வாகம் சார்பில், பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில், இலவச கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பிடத்தில், இரவு நேரத்தில் விளக்குகள் எரிவது இல்லை. நாள் தோறும் சுத்தம் செய்வது இல்லை என்ற புகார் ஏற்கனவே உள்ளது. சில நேரங்களில் கழிப்பிடத்தில் இருந்து கழிவு நீர் வெளியில் ஓடுகிறது. இதனால், பயணிகள் துர்நாற்றத்தால், முகத்தை துணியால் மறைத்து கொண்டு செல்கின்றனர். கழிவுநீர் செல்லும் பகுதியில், தள்ளுவண்டியில் பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பயணிகளுக்கு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தை நாள்தோறும் சுத்தம் செய்து, கழிவுநீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


Tags:    

Similar News