உள்ளூர் செய்திகள் (District)

சாலை விபத்தில் பள்ளி மாணவர் பலி

Published On 2023-04-03 08:17 GMT   |   Update On 2023-04-03 08:17 GMT
  • இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் பலியானார்
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

கரூர்,

திண்டுக்கல் மாவட்டம், குஜிலி யம்பாறை பாரப்பட்டி பகுதியை சேர்ந்த, தண்டபாணி மகன் நவீன் குமார் (வயது 15). இவர் ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று இருசக்கர வாகனத்தில் சகோதரி பிரியாவை அழைத்துக் கொண்டு ஈசநத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த நவீன் குமார் மீது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோதியது. அதில், நவீன்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். சகோதரி பிரியா காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News