உள்ளூர் செய்திகள்

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-05-09 05:29 GMT   |   Update On 2023-05-09 05:29 GMT
  • விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது
  • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்

கரூர் :

கரூர் நொய்யல் அருகே முத்தனூரில் வருண கணபதி கோவில் உள்ளது. நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சுவாமிக்கு பால், இளநீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News