உள்ளூர் செய்திகள் (District)

வேலாயுதம்பாளையம் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம்

Published On 2023-01-01 09:36 GMT   |   Update On 2023-01-01 09:36 GMT
  • வேலாயுதம்பாளையம் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
  • முகாமில் கலந்து கொண்ட கால்நடைகள் மற்றும் கன்று குட்டிகளுக்கு பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது

கரூர்:

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பில் புகளூர், செம்படாபாளையம் பகுதியில் கால்நடைகளுக்கான பெரியம்மை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் கண்ணன் தலைமையில் கால்நடை ஆய்வாளர் நடராஜன், உதவியாளர் மீரா ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட கால்நடைகள் மற்றும் கன்று குட்டிகளுக்கு பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது. விவசாயிகளுக்கு கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், கால்நடைகளுக்கு புரதம் சத்து நிறைந்த பசுன தீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் செம்படாபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளையும், கன்றுகுட்டிகளையும் கொண்டு வந்து பெரியம்மை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News