உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-25 09:13 GMT   |   Update On 2023-04-25 09:13 GMT
  • மாவட்டத் தலைவர் வக்கீல் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

கோவை,

ஐகோர்ட்டில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வக்கீல் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் வக்கீல் ராமர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் இந்தியாவில் உள்ள ஐகோர்ட்டுகளில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படால் தான் மக்களுக்கு சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகத்தின் மாண்புகளும் சரியான புரிதலோடு சேரும்.

அப்போதுதான் நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News