உள்ளூர் செய்திகள்

முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2022-07-25 07:00 GMT   |   Update On 2022-07-25 07:00 GMT
  • முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை

மதுரை அழகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது75). இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த சந்திரன் அழகர் கோவில் மெயின் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(40). சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியேறிய இவர் விஷம் குடித்து திருமலைநாயக்கர் மகால் முன்பு இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய தெற்குவாசல் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ரமேஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News