உள்ளூர் செய்திகள் (District)
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம்
- அலங்காநல்லூரில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- தேசிய மாணவர் படை மற்றும் அரிமா சங்கம் சார்பில் விபத்தில்லாத தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை மற்றும் அரிமா சங்கம் சார்பில் விபத்தில்லாத தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு அய்யப்பன் கோவில் முன்பிருந்து பஸ் நிலையம் வழியாக கேட்டுகடை வரை சென்று மீண்டும் பஸ் நிலையம் வந்தனர்.
தலைமையாசிரியர் பிராக்ரன்ஸ் லதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி, அரிமா சங்க தலைவர் சோமசுந்தரம், பொருளாளர் மனோகரவேல் பாண்டியன், முன்னாள் தலைவர் ரகுபதி, நடராஜன், பிரபாகரன், தேசிய மாணவர் படை அலுவலர் காட்வின், நாட்டு நலப் பணி திட்ட செயலர் ஜெய்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.