- சோழவந்தான் பேரூராட்சியை தூய்மை நகராக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
- சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
சோழவந்தான்
நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டு பகுதிகளில் தன்னார்வலர்களுடன், தூய்மை பணியாளர்கள் இணைந்து தெருக்கள் மற்றும் வைகை ஆற்று கரையோர பகுதிகளில் குப்பைகளை அகற்றி "குப்பைகள் இல்லாத தூய்மை நகராக்கும்" முயற்சியில் ஈடுபட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் லதா கண்ணன் முன்னிலை வகித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
கவுன்சிலர்கள் வக்கீல் சத்தியபிரகாஷ், குருசாமி, முத்துலட்சுமி சதீஸ், செல்வராணி ஜெயராமன்,தன்னார்வலர்கள் மில்லர் இளமாறன், மணிகண்டன், நாகேந்திரன், பேரூராட்சி கணக்கர் கல்யாண சுந்தரம், கண்ணம்மா, மேஸ்திரி சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.