- திருப்பரங்குன்றத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்வதை கண்டித்து நடந்தது.
திருப்பரங்குன்றம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணையை செய்வதை கண்டித்து அந்த கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி தலைவர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். ஓ.பி.சி. தலைவர் சரவணபவன் வரவேற்றார்.
இதில் தெற்கு மாவட்டத்தலைவர் பாண்டியன், துணைத்தலைவர் பழனிகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், பொன்.மனோகரன், ராஜ்குமார், பொன்மகாலிங்கம், பூபதி பாண்டியன், சீனிவாசன், செல்வராஜ், சின்னதேவர், இளைஞர் காங்கிரஸ் காசிமாயன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.