சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி
- வைகாசி திருவிழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- பேரூர் பகுதி வணிகர்கள், அ.ம.மு.க.வின் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், சர்பத் உள்ளிட்ட பானங்கள் வழங்கினர்.
சோழவந்தான்
மதுைர மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
சங்கம்கோட்டை மந்தை களத்தில் பம்பையுடன் அம்மன் கரகம் எடுத்து பூசாரி சண்முகவேல் பூக்குழி இறங்கினார். இதனை தொடர்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பால்குடம், அலகு குத்தியும் காவடி சுமந்தும் பக்தி பரவசத்து டன் பூக்குழி இறங்கினர்.
இந்நிகழ்வில் பேரூர் பகுதி வணிகர்கள், அ.ம.மு.க.வின் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், சர்பத் உள்ளிட்ட பானங்கள் வழங்கினர். இதையடுத்து இரவு அம்மன் மின்னொளி.அலங்காரத்துடன் கோர கத்தில் எழுந்தருளி வீதி உலா பவனி வந்தார் சோழவந்தான்.இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற் கொண்டர். தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பசும்பொன் கண்ணன். மற்றும் வீரர்கள் மீட்பு குழுவினர் பங்கேற்றனர்.