உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பால் சாவு

Published On 2022-08-26 09:02 GMT   |   Update On 2022-08-26 09:02 GMT
  • அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பால் இறந்தார்.
  • இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை ஆண்டார் கொட்டாராம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 48). இவர் மதுரை அரசு போக்குவரத்து கழக நிறுவனத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி.

சம்பவத்தன்று இரவு ராஜகோபால் பெரியார்- சக்கிமங்கலம் அரசு பேருந்தில் பணியில் இருந்தார். அந்த பஸ் நள்ளிரவில் சக்கிமங்கலத்தில் நின்றிருந்தபோது தூங்கியிருந்த ராஜகோபாலுக்கு நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் வலியால் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அடுத்த நாள் காலையில் டிரைவர் எழுப்பிய போது, ராஜ கோபாலிடம் பேச்சு மூச்சு இல்லை. எனவே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த வைத்து, இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News