உள்ளூர் செய்திகள் (District)
- கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பாதுகாப்பு பணியில் காடுபட்டி உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட வைகையாற்றின் தெற்கு கரை பகுதியில் அமைந்துள்ள கச்சிராயிருப்பு கிராமத்தில், கொடிப்புலி கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. யாக பூஜைகள் முடிவடைந்த பிறகு, கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றினர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் சோழவந்தான், மேலக்கால், மதுரை, உசிலம்பட்டி, செக்கானூரணி பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கொடிப்புலி பங்காளிகள் கூட்டம் செய்திருந்தனர். கோவில்பாப்பாகுடி ஒன்றிய கவுன்சிலர் செல்லபாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணியில் காடுபட்டி உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.