மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
- மண்டல தலைவர் டி.எஸ். மைக்கேல்ராஜ் தலைமை தாங்குகிறார்.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம் செல்லூர் கண்மாய்கரை ரோடு லூர்து அன்னை பேப்பர் ஸ்டோர் வளாகத்தில் நாளை(19-ந் தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது.
மண்டல தலைவர் டி.எஸ். மைக்கேல்ராஜ் தலைமை தாங்குகிறார். தங்கராஜ், சில்வர்சிவா, குட்டி என்ற அந்தோணிராஜ், ஸ்வீட்ராஜன், ஜெயகுமார், தேனப்பன், வழக்கறிஞர் கண்ணன், சூசை அந்தோணி முன்னிலை வகிக்கின்றனர்.
ஆன்லைன் வர்த்த கத்துக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் சுதேசி வணிகத்தை வலியுறுத்தும் வணிகர் தின சிறப்பு மாநாடு சென்னையில் நடத்துவது குறித்து ஆலோசனை பெறப்படுகிறது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நிர்வாகிகள் சுருளி, ஆனந்த், அப்பாஸ், ராமர், கரன்சிங், பிச்சைப்பழம், சரவணன், தேனப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம் என்று மதுரை மண்டல தலைவர் டி.எஸ். மைக்கேல்ராஜ் தெரிவித்தார்.