உள்ளூர் செய்திகள்

ஊட்டி அருகே திருமண தரகருக்கு கத்திக்குத்து

Published On 2022-12-11 08:30 GMT   |   Update On 2022-12-11 08:30 GMT
  • திருமண தரகர்கள் 2 பேருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.
  • தேவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள முதுகொலா கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா்.

பிக்கோல் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவன். இவா்கள் இருவரும் திருமண தரகா்களாக உள்ளனா். இருவருக்குமிடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவைக்கு செல்ல பாலகொலா சந்திப்பு பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக சிவகுமாா் காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த தேவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவகுமாரை வயிற்றில் குத்தினாா்.

இதை பாா்த்த கிராம மக்கள் தேவனை பிடித்து கட்டி வைத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். உடனடியாக அங்கு வந்த ஊட்டி புறநகர் போலீசார் தேவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கத்தியால் குத்தப்பட்ட சிவகுமாா் ஆபத்தான நிலையில ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News