உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் திருமணமான ஐ.டி. நிறுவன பெண்ணுடன் டிரைவர் கள்ளக்காதல்

Published On 2023-07-02 09:16 GMT   |   Update On 2023-07-02 09:16 GMT
  • 3 பேர் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
  • விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் தாக்கப்பட்டது தெரியவந்தது.

கோவை,

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் 22 வயது வாலிபர். இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

வாலிபர் தினசரி கீரணத்தம் மற்றும் பீளமேட்டில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை அழைத்து செல்வது வழக்கம். அப்போது வாலிபருக்கு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் குனியமுத்துரைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். அப்போது வாலிபர் இளம்பெண்ணுக்கு ரூ. 3 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். அதை திருப்பி கேட்ட போது அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். சம்பவத்தன்று வாலிபர் கீரணத்தம் தொழில்நுட்ப பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வாலிபர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் தாக்கப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News