உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே வியாபாரி வீட்டில் 5 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

Published On 2022-08-12 09:12 GMT   |   Update On 2022-08-12 09:12 GMT
  • நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமி வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் செயின் மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
  • வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே, கொள்ளை சம்பவத்தில் உள்ளுர் கொள்ளையர்களு க்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது.

தக்கலை, ஆக.13-

தக்கலை அருகே திருவிதாங்கோடு தைக்கா பள்ளி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காசிம் (வயது 70).

இவர் சிறுதொழில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. நேற்று இரவு இவர் தனது மகன் இக்பால் என்பவரின் வீட்டுக்கு தூங்க சென்றுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமி வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் செயின் மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை இவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு முன் கதவு உடைக்க பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே, கொள்ளை சம்பவத்தில் உள்ளுர் கொள்ளையர்களு க்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News