உள்ளூர் செய்திகள்
- கனகம்மாளை அவரது மகள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
- விஷம் குடித்த கனகம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சீனி. இவரது மனைவி கனகம்மாள்(வயது 63). இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் மயக்கநிலையில் கிடந்தார். உடனே அவரது மகள் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அப்போது அவர் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கனகம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கனகம்மாளுக்கு பார்வை குறைபாடு காரணமாக சிகிச்சை அளித்ததில் அவருக்கு சரிவர குணமாகவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.