உள்ளூர் செய்திகள் (District)
- அந்த வழியாக எதிரே வந்த கார் முதியவர் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி நேற்று இளம்பிள்ளை இறந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பில்லனகுப்பம் அருகே உள்ள போலுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் இளம்பிள்ளை (வயது76).
இவர் கடந்த 12-ந் தேதி ஒசூர் கிருணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த கார் முதியவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த இளம்பிள்ளை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இளம்பிள்ளை இறந்தார்.
இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.