உள்ளூர் செய்திகள்

கடுமையான பனிமூட்டம் காரணமாக ஏற்காடு மலை பாதையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனம் சென்ற காட்சி.

ஏற்காட்டில் தொடர் சாரல் மழை கடும் குளிரால் மக்கள் அவதி

Published On 2022-11-03 06:37 GMT   |   Update On 2022-11-03 06:37 GMT
  • ஏற்காட்டில் கடந்த 2 தினங்களாக இடைவிடாத சாரல் மழையும், கடுமையான பனிப் பொழிவும் நிலவி வருகிறது.
  • இந்த சாரல் மழை காரணமாக காப்பி பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஏற்காடு:

வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் நிலையில் ஏற்காட்டில் கடந்த 2 தினங்களாக இடைவிடாத சாரல் மழையும், கடுமையான பனிப் பொழிவும் நிலவி வருகிறது.

ஏற்காட்டில் அதிகப்படி யாக காப்பி விவசாயம் செய்யப்படுகிறது. இந்த சாரல் மழை காரணமாக காப்பி பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் காப்பி விவ சாயிகள் வேத னையடைந்து உள்ளனர். மேலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் காப்பி தோட்ட பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுவதால், முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்கள் இயக்கப்படுகிறது.

மேலும் கடுமையான குளிரும் காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் கூட ஸ்வட்டர், ஜர்க்கின் உள்ளிட்டவை அணியாமல் வெளியில் வரமுடியாது நிலை உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடர் மழையால், இப்பகுதியில் ஏராளமானோர் சளி, காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்காட்டில் இடைவிடாத சாரல் மழை, கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News