அதிமுக தொழிற்சங்க மே தின விழா பொதுக்கூட்டம்
- மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, கிருஷ்ணமூர்த்தி, செல்லமுத்து, துரைராஜ், கண்ணதாசன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம் மே தின சிறப்புக்கள் குறித்தும், அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்தும் பேசினார். மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் சிவசுப்ரமணியம், மீனவர் பிரிவு இணை செயலாளர் தங்கமணி, முன்னாள் எம்பி சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பேசினர்.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், மாவட்ட நிர்வாகிகள் குணசீலன், ராஜாராம், ராஜேந்திரன், டாக்டர் நவாப்ஜான், முத்தமிழ்செல்வன் மற்றும் துறைமங்கலம் சந்திரமோகன், கீழப்புலியூர் நடராஜன், வக்கீல் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். முடிவில் மின்வாரிய பிரிவு கோட்ட பொருளாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.