உள்ளூர் செய்திகள் (District)

லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2023-04-19 08:52 GMT   |   Update On 2023-04-19 08:52 GMT
  • பெரம்பலூர் அருகே பரிதாபம்
  • போலீசார் விசாரணை

குன்னம்,

பெரம்பலூர் பனிமலர் பள்ளி எதிரில் வசிப்பவர் குணசேகரன். இவரது மகன் சாரதி (வயது 22). இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு திருமாந்துறை சுங்கச்சாவடியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சாரதி சென்று கொண்டிருந்தார்.சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, எதிரே திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் சாரதி மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சாரதியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்த உடன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News