உள்ளூர் செய்திகள் (District)

தன்னம்பிக்கையுடன் உழைத்து நேர்மையாக வாழ கல்வி அவசியம்

Published On 2023-02-06 09:32 GMT   |   Update On 2023-02-06 09:32 GMT
  • மலேசிய தொழிலதிபர் டத்தோ.பிரகதீகுமார் பேச்சு
  • பள்ளி ஆண்டு விழா

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியின் 8வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ராம்குமார் தலைமை வகித்தார். பள்ளிமுதல்வர் ஹேமா அனைவரையும் வரவேற்றார்.பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களில் 7பேர் தேர்வு செய்து நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.விழாவில் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்த மலேசிய தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ்குமார் சிறப்பு விருச்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றி பேசியதாவது.பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இளம் பருவம் முதல் வாழ்க்கையில் உன்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்து நேர்மையாக வாழ்ந்தால் உயர்ந்த இடத்தை அடைய முடியும். அப்படி உயர்ந்த இடத்தை அடைவதற்கு படிப்பு மிகவும் முக்கியம் எனவும் பேசினார். விழாவை பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிதுணை தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ஆர்.பிரபு மற்றும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News