உள்ளூர் செய்திகள்

மகா மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா

Published On 2023-05-09 06:23 GMT   |   Update On 2023-05-09 06:23 GMT
  • மகா மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது
  • தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்த பிரம்மதேசத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதுபோன்று இந்தாண்டும் கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி 25 அடி உயர தேரை பூக்களால் அலங்கரிக்கும் தலை அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமியை தலையிலும், தோளிலும் சுமந்து வந்து தேரில் எழுந்தருள செய்தனர். இதைத்தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் பிரம்மதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தகோடிகள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

Similar News