உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு மனு விசாரணை முகாமில் 65 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Published On 2023-05-31 07:56 GMT   |   Update On 2023-05-31 07:56 GMT
  • பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு மனு விசாரணை முகாமில் 65 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
  • மீதமுள்ள 22 மனுக்களின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பெரம்பலூர் -21, பாடாலூர் -3, மருவத்தூர்- 6, அரும்பாவூர்- 12, அனைத்து மகளிர் காவல்நிலையம் -10, குன்னம் 8, மங்களமேடு-18, வி.களத்தூர் 5, கை.களத்தூர் -4 என மொத்தம் 87 மனுக்கள் பெறப்பட்டு அதில் 65 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 22 மனுக்களின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News