உள்ளூர் செய்திகள் (District)

நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு விசாரணை முகாம்

Published On 2023-02-04 06:28 GMT   |   Update On 2023-02-04 06:28 GMT
  • 8 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
  • 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில், நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் பெரம்பலூர் வட்டார வருவாய் துறையினருடன் இணைந்து தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாமினை நேற்று நடத்தினா். இதில் பெரம்பலூர் வருவாய் தாசில்தார் சுகுணா, மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முகமது அபுபக்கர், குணாவதி ராமர், ஏட்டு ரவிசாந்தகுமார் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து நிலப்பிரச்சினை தொடர்பான 8 கோரிக்கை மனுக்களை பெற்று, அதில் 5 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டனர்."

Tags:    

Similar News