- கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது
- பெரம்பலூரில் நாளை முதல்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாளை (5-ந் தேதி) முதல் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கோடைக்கால கலைப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் நீலமேகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் பள்ளிக்கல்வியோடு துணைக்கல்வியாக கலைப் பயிற்சி வழங்கி அவர்களின் கலைத் திறனை மேம்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சவகர் சிறுவர் மன்றத்தில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் ஆகிய கலைப்பயிற்சிகள் 5 வயது முதல் 16 வயது வரையில் உள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழ நாளை (5ம்தேதி) முதல் வரும் 14 -ந் தேதி வரை கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சி முகாம் காலை 9 மணி முதல் நண்பகல் ஒரு மணிவரை நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி நிறைவு நாளில் பங்கேற்புச் சான்று வழங்கப்படும்.
பயிற்சி முகாமில் கலந்து விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது வயதுச் சான்றிதழுடன் பெரம்பலூர் அரசு இசைப்பள்ளிக்கு நாளை காலை 9 மணிக்கு வருகை தந்து கலைப்பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறலாம் என தெரிவித்துள்ளார்.