உள்ளூர் செய்திகள் (District)

லஞ்சம் வாங்கிய கோயில் எழுத்தர் சஸ்பெண்ட்

Published On 2023-03-31 07:42 GMT   |   Update On 2023-03-31 07:42 GMT
  • லஞ்சம் வாங்கிய கோயில் எழுத்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
  • ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்

பெரம்பலூர்:

பெரம்பலூரில் கோயில் இடத்தில் கடை நடத்தும் நபரிடம் வரி ரசீது போடுவதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோயில் எழுத்தர் ரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூரில் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த மதனகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தி வரும் பெரம்பலூர், காந்தி நகரைச் சேர்ந்த குப்புசாமி மகன் சிங்காரம் (வயது 45). என்பவர் தொடர்ந்து கடை நடத்துவதற்கு அந்த இடத்தின் வரி ரசீது போட்டு தருமாறு கோயில் எழுத்தர் ரவியுடம் கேட்டுள்ளார். அதற்கு ரவி ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதன்படி சிங்காரத்திடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கோயில் எழுத்ர் ரவியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் ரவியை சஸ்பெண்ட் செய்து கோயில் உதவி ஆணையரும், தக்கருமான லட்சுமணன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News