உள்ளூர் செய்திகள் (District)

வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2023-03-31 08:21 GMT   |   Update On 2023-03-31 08:21 GMT
  • வாகனம் மோதி வாலிபர் பலியானார்
  • எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள மகாராஜா ஹோட்டல் எதிரே இன்று அதி காலை 3-மணி அளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து மங்களமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News