உள்ளூர் செய்திகள் (District)

வாகனம் மோதி பெண் பலி

Published On 2023-04-01 08:13 GMT   |   Update On 2023-04-01 08:13 GMT
  • வாகனம் மோதி பெண் பலியானார்
  • போலீசார் இதுகுறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கழனிவாசல் கிராமத்தை சேர்ந்த முத்துசாமியின் மகள் கொளஞ்சி(வயது 45). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த நிலையில் இவரை, அவரது உறவினர்கள் பராமரித்து வந்தனர். நேற்று காலை அவர் தனது உறவினர் வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை தேடினர்.

அப்போது அவர் திருமாந்துறை-அகரம்சீகூர் சாலையில் வாகனம் மோதி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார், கொளஞ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொளஞ்சி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News