உள்ளூர் செய்திகள் (District)
தவறி விழுந்த விவசாயி மின்வேலியில் சிக்கி பலி
- வயலுக்கு சென்ற போது தவறி மின்வேலியில் விழுந்தார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பெரம்பலூர்
வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த கோவிந்தன்(வயது 70) வயலுக்கு குளிக்க சென்றார். அப்போது வரப்பில் நடந்து சென்றபோது, சோளக்காட்டின் வரப்பு ஓரத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியின் மீது அவர் தவறி விழுந்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அப்போது அவர் வளர்த்த நாயும் அவருடன் சென்றது. அந்த நாயும் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி செத்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.