கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்ட மசோதா நகல்களை எரித்தனர்.
- பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
கோவை,
தமிழகத்தில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவிற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அந்த சட்ட மசோதா நகல்களை எரித்தும். தமிழக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியும் கண்டனத்தை பதிவு செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நகல் எரிப்பை தடுக்க முற்பட்டதால் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.