ஆலங்குடியில் கால்நடை சிறப்பு முகாம்
- ஆலங்குடியில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது
- கால்நடை மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றன.
ஆலங்குடி
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி கிராமத்தில் நடைபெற்றது. முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சை அளித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், தீவனப் பயிர் மற்றும் தீவனபுல் சாகுபடி விளக்கம், கால்நடை மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.இம்முகாமில் மண்டல இணை இயக்குனர் மரு. சம்பத் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் கால்நடை உதவி மருத்துவர் பாவை, உதவி கால்ந டை மருத்துவர் சுவிதா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் வடிவேலு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வின்சென்ட் தேபவுல் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்,