உள்ளூர் செய்திகள் (District)

அறந்தாங்கியில் கால்நடை சிறப்பு முகாம்

Published On 2023-01-07 08:20 GMT   |   Update On 2023-01-07 08:20 GMT
  • அறந்தாங்கியில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது
  • கால்நடைகளை சிறப்பாக பராமரித்த விவசாயிகள் பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விக்னேஷ்வரபுரத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் சட்ட மன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.அப்போது கால்நடைகளுக்கு பரவிவரும் நோய்கள் குறித்தும், அவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று எடுத்துக் கூறப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு தடுப்பூசி, மருத்து, மாத்திரைகள் வழங்கப்பட்டதோடு கால்நடைகளை சிறப்பாக பராமரித்த விவசாயிகள் பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதில் விக்னேஷ்வரபுரம், பாக்குடி, பஞ்சாத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பயனடைந்தனர். அதே போன்று கானாடு ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மூலம் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.நிகழ்ச்சியில் துறை மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News